'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
வடஇந்தியாவுக்கு லதா மங்கேஷ்கர் என்றால் தென்னிந்தியாவுக்கு பி.சுசீலா. இசைகுயில் என்றும், மெல்லிசை அரசி என்றும் போற்றப்படுகிறவர். இந்திய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர். 5 தேசிய விருதுகளையும், 12 மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். ஏற்கெனவே அவருக்கு பல பல்கலை கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
இந்த நிலையில் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசிர் பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.