அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சமீபத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள மாரீசன் என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கூட்டணி என சொல்லலாம். குறிப்பாக கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்தில் வடிவேலு, பஹத் பாசில் இருவருக்குமான நடிப்பு போட்டியை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம் ஒரு நடுத்தர வயது மனிதனும், ஒரு இளைஞனும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலை பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை மையப்படுத்தி உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2013ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'நார்த் 24 காதம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்திலும் நடுத்தர வயது மனிதரான நெடுமுடி வேணுவுடன், யாரிடமும் சிரித்து பழகாத இளைஞரான பஹத் பாசில் எதிர்பாராத விதமாக ஒரு சாலை பயணத்தில் இணைந்து பயணிப்பார். அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளும் எதிர்பாராமல் ஏற்படும் ஒரு பிரச்சனையை இவர்கள் ஒன்று சேர்ந்து எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் தான் கதையாக சொல்லப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த படம் தான் மாரீசன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறதா என்கிற சந்தேகம் ரசிகர்கள் சிலருக்கு எழுந்துள்ளது.