சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
எண்பதுகளின் இறுதியில் கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்கிற படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. நடிகை பானுப்ரியாவின் சகோதரியான இவர் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படும் டாக்டர் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தாராவி பேங்க் என்கிற வெப் சீரிஸிலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சாந்தி பிரியா. வர்ஷா பரத் என்பவர் இயக்கும் இந்த படம் 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. “பொதுவாக முன்னாள் கதாநாயகிகள் மீண்டும் நடிப்பதற்காக வரும்போது அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைப்பது வழக்கம். ஆனால் எனக்கு இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் சாந்தி பிரியா.