என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
எண்பதுகளின் இறுதியில் கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்கிற படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. நடிகை பானுப்ரியாவின் சகோதரியான இவர் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படும் டாக்டர் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தாராவி பேங்க் என்கிற வெப் சீரிஸிலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சாந்தி பிரியா. வர்ஷா பரத் என்பவர் இயக்கும் இந்த படம் 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. “பொதுவாக முன்னாள் கதாநாயகிகள் மீண்டும் நடிப்பதற்காக வரும்போது அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைப்பது வழக்கம். ஆனால் எனக்கு இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் சாந்தி பிரியா.