புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

எண்பதுகளின் இறுதியில் கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்கிற படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. நடிகை பானுப்ரியாவின் சகோதரியான இவர் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படும் டாக்டர் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தாராவி பேங்க் என்கிற வெப் சீரிஸிலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சாந்தி பிரியா. வர்ஷா பரத் என்பவர் இயக்கும் இந்த படம் 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. “பொதுவாக முன்னாள் கதாநாயகிகள் மீண்டும் நடிப்பதற்காக வரும்போது அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைப்பது வழக்கம். ஆனால் எனக்கு இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் சாந்தி பிரியா.




