வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சினிமா பார்ப்பது மேற்கத்திய கலாசாரம் என்றும் தமிழ் பாரம்பரிய நாடகங்களை சினிமா அழித்து விடும் என்றும் சினிமாவுக்கு எதிரான ஒரு பிரசாரம் இருந்து கொண்டே இருந்தது. இந்த கருத்துக்களின் மாற்றும் வகையில் தனிப்பாடல் ஒன்று 'ராஜா ராணி' படத்திற்காக உருவாக்கப்பட்டது.
1956ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ பீம்சிங் இயக்கினார். சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பத்மினி, ராஜ சுலோச்சனா, என்.எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதினார். அவர் எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' 'சாக்ரடீஸ்' போன்ற நாடகங்களும் இந்த படத்தில் இடம்பெற்றது.
படத்தின் இந்த சிறப்பு அம்சங்களை சொல்லி படம் பார்க்க வருமாறு அழைத்து ஒரு பாடல் உருவானது அந்த பாடல் படத்தின் துவக்கத்திலேயே இடம் பெற்றது.
"வாங்க வாங்க இன்று இரவு நல்லிரவு" என்று தொடங்கும் இந்த பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடினார். பாடலை கருணாநிதி எழுதியிருந்தார். பாடலுக்கு பத்மினி ஆடி இருந்தார் கீழ்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவில் தியேட்டர் செட் அமைக்கப்பட்டு பாடல் படமாக்கப்பட்டது.




