மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

சினிமா பார்ப்பது மேற்கத்திய கலாசாரம் என்றும் தமிழ் பாரம்பரிய நாடகங்களை சினிமா அழித்து விடும் என்றும் சினிமாவுக்கு எதிரான ஒரு பிரசாரம் இருந்து கொண்டே இருந்தது. இந்த கருத்துக்களின் மாற்றும் வகையில் தனிப்பாடல் ஒன்று 'ராஜா ராணி' படத்திற்காக உருவாக்கப்பட்டது.
1956ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ பீம்சிங் இயக்கினார். சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பத்மினி, ராஜ சுலோச்சனா, என்.எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதினார். அவர் எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' 'சாக்ரடீஸ்' போன்ற நாடகங்களும் இந்த படத்தில் இடம்பெற்றது.
படத்தின் இந்த சிறப்பு அம்சங்களை சொல்லி படம் பார்க்க வருமாறு அழைத்து ஒரு பாடல் உருவானது அந்த பாடல் படத்தின் துவக்கத்திலேயே இடம் பெற்றது.
"வாங்க வாங்க இன்று இரவு நல்லிரவு" என்று தொடங்கும் இந்த பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடினார். பாடலை கருணாநிதி எழுதியிருந்தார். பாடலுக்கு பத்மினி ஆடி இருந்தார் கீழ்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவில் தியேட்டர் செட் அமைக்கப்பட்டு பாடல் படமாக்கப்பட்டது.