பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பரபரப்பு நிலவி வரும் தமிழக அரசியல் சூழ்நிலையில் திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். எல்லா நடிகர், நடிகைகளுமே சசிகலா முதல்வராக வரக்கூடாது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி வருகிறார்கள். கமல்ஹாசன் "சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை" என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:
என் கோபங்கள் இப்போது எரிச்சலாக வெளிப்படுகிறது : இன்றைய அரசியல் பற்றிய எனது கருத்துக்களை கவனமாக பதிவு செய்து வருகிறேன். அரசியலையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனது கருத்துக்களை யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். குறிப்பாக வன்முறையாளர்கள் கையில் என் கருத்து தவறாக போய் சேர்ந்துவிடக்கூடாது. இதுவரை என்னிடம் இருந்த கோபங்கள் இப்போது எரிச்சலாக வெளிப்படுகிறது.
நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல : 40 வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் இங்கே இருக்கிறது. இதற்காக எந்த அரசியல் கட்சியையும் குறைசொல்லவில்லை. ஆனால் ஜனநாயக நாட்டில் அதை சுட்டிக்காட்ட எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல எங்களை மேய்ப்பதற்கு மேய்ப்பன்களோ, தலைவர்களோ தேவையில்லை. எங்களைப்போல உழைக்கிற ஒரு உழைப்பாளிதான் வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியிடமிருந்தும் எங்களுக்கு எந்த சேவையும் கிடைக்கவில்லை.
முதல்வராக பன்னீர் தொடரலாம் : ஓ.பன்னீர் செல்வம், சசிகலா இருவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருக்கிறார். அவரது ஆட்சி திறனில் திறமையின்மைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவர் ஏன் சில காலம் முதல்வராக நீடிக்க கூடாது. மக்களுக்கு அவரது ஆட்சி பிடிக்கவில்லை என்றால் பிறகு நீக்கிக் கொள்ளலாம். மக்களுக்கு உதவும் ஒரு ஜனநாயக கருவிதான் அவர். இப்படிச் சொல்வதால் நான் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கூட்டத்துடன் இணையப்போவதில்லை. ஓட்டுப்போடும்போது மட்டும் விரலில் கறைபட்டுக் கொள்கிறேன். நான் அரசியலை சாராதவனாக இருந்தாலும் எனக்கென்று சில சித்தாந்தங்கள் இருக்கிறது.
சசிகலா முதல்வர் ஆவதை நான் விரும்பவில்லை : மக்களுக்கு எது நல்லதோ அதை ஆதரிக்கிறேன். அதனால் சசிகலா முதல்வர் ஆவதை நான் விரும்பவில்லை. இப்போதிருக்கும் சூழ்நிலை மோசமான இறுதிக் காட்சி. சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது. சசிகலாவிடத்தில் அதிக ஆதரவு இருப்பது என்னை ஈர்க்கவில்லை. தேசத்தை வழிநடத்துவது எப்படி என்று தெரியவில்லையென்றால் அவர்கள் அந்த இடத்தில் இருப்பதற்கு உரிமையில்லை. நான் யாருக்கும் தலைவன் அல்ல. தமிழக மக்களை ரசிப்பவன் மட்டுமே என்றார் கமல்.