பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
முன்னாள் எம்.எல்.ஏ.வான மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. சிம்புவின் மூன்று வேடங்களில் ஒன்றான மதுரை மைக்கேல் சம்பந்தப்பட்ட டீஸர் ஏற்கனவே வெளியானது. இப்படத்தில் இடம்பெறும் சிம்புவின் மற்றொரு கெட்-அப்பான அஸ்வின் தாத்தா சம்பந்தப்பட்ட டீஸரும் அண்மையில் வெளியாகி உள்ளது.
இரண்டு கெட்டப் வெளியாகிவிட்ட நிலையில் ஏஏஏ படத்தில் வரவிருக்கும் சிம்புவின் மூன்றாவது கெட்-அப் என்னவாக இருக்கும் என்று சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்! இந்த கெட்அப்பில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகிகளாக தமன்னா, ஸ்ரேயா ஷரண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஏஏஏ படத்தில் இடம்பெற்றுள்ள, என்னமோ ஒரு மாதிரி என்ற பாடலில் இடம்பெற்றுள்ள 'இன்னைக்கு நைட் மட்டும் நீ கேர்ள்ப்ரண்ட் ஆனாப் போதும்' என்ற பாடல் வரி பெண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பாடலை ஏஏஏ படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் ஏஏஏ படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என சமூகவலைத்தளங்களில் பெண்களிள் குரல் ஒலிக்கிறது.