பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியானது என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியை யார் கைப்பற்ற போவது சசிகலாவா அல்லது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமா என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரிய வர உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் குறித்து திரைபிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அரவிந்த்சாமியும் தமிழக அரசியல் குறித்து தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛எம்.எல்.ஏ.க்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாக அமையும்? ஆகவே, ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான தீர்வாக அமையும்'' என்று கூறியுள்ளார்.