விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு அடுத்த இடத்தில் பயணித்து வந்தவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த 2016ல் நடிகை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பிறகு திரையுலகிலும் பர்சனல் ஆகவும் நிறைய பிரச்சனைகளை சந்தித்த திலீப் திரையுலகில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த எட்டு வருடங்களில் ஓரிரு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019ல் வெளியான கோடதி சமக்சம் பாலன் வக்கீல் என்கிற படம் தான் கடைசியாக அவருக்கு ஒரு டீசன்டான வெற்றியை பெற்று தந்தது.
அதன் பிறகு இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து வெளியான அவரது ஏழு படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதிலும் கடைசியாக வெளியான பாந்த்ரா மற்றும் கடந்த மாதம் வெளியான தங்கமணி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த நிலையில் தங்கமணி படம் வெளியாகி சரியாக 50 வது நாளில் வரும் ஏப்-26 ஆம் தேதி திலீப் நடித்துள்ள பவி கேர் டேக்கர் என்கிற படம் வெளியாக இருக்கிறது.
வினீத் குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான திலீப்பின் மூன்று படங்களும் சீரியஸான கதையம்சம் கொண்டதாக இருந்ததன. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வழக்கமான ஒரு திலீப் படமாக உருவாகியுள்ளதாம். அதனால் இந்த பவி கேர்டேக்கர் படம் திலீப்புக்கு ஒரு வெற்றி படமாக அமைந்து அவரை கை தூக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.