‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தற்போது 2024 பார்லிமென்ட் தேர்தல் ஆறுகட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் மே 13 இல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள பீதாப்புரம் என்கிற சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் பவன் கல்யாண்.
இதற்காக சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பவன் கல்யாண் அப்போது தன்னிடம் 164.53 கோடி சொத்துக்கள் உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இதில் 118.3 6 கோடி அசையா சொத்துக்களாகவும் 46.17 கோடி அசையும் சொத்துக்களாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 14 கோடி மதிப்பிலான 11 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




