ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தற்போது 2024 பார்லிமென்ட் தேர்தல் ஆறுகட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் மே 13 இல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள பீதாப்புரம் என்கிற சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் பவன் கல்யாண்.
இதற்காக சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பவன் கல்யாண் அப்போது தன்னிடம் 164.53 கோடி சொத்துக்கள் உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இதில் 118.3 6 கோடி அசையா சொத்துக்களாகவும் 46.17 கோடி அசையும் சொத்துக்களாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 14 கோடி மதிப்பிலான 11 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




