வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

பாலிவுட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் விக்ரம் பட். முன்னணி நடிகர்களை வைத்து முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் மீது டாக்டர் அஜய் மர்த்தியா என்பவர், விக்ரம் பட் தன்னிடம் படம் தயாரிப்பதற்காக ஆரம்பத்தில் 7 கோடி ரூபாயை தரச் சொல்லி பெற்றுக்கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தவறான டாக்குமென்ட்களை காட்டி 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டார் என புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரி பட் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை அவரது மனைவி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விக்ரம் பட்டும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது சிறைவாசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், “நான் கிருஷ்ணனின் தீவிர பக்தன். அதனால் சிறை என்பது எனக்கு ஐந்தாவது வீடு போல. என்னைப் பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உண்மை வெல்லும்” என்று கூறியுள்ளார்.




