வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
பொதுவாக தென்னிந்திய அளவில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியான பிறகு நான்கு வாரங்களிலேயே வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீடு தாமதமாக வெளியானது. மேலும், தியேட்டர்களிலும் தொடர்ந்து நல்ல கூட்டத்துடன் ஓடியதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
அடுத்த வாரம் மே 3ம் தேதிதான் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகே வெளியாகிறது. இருப்பினும் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பத்து வார இடைவெளியைக் கூட ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டதாம்.
மலையாளத் திரையுலகத்தில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.




