பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
பொதுவாக தென்னிந்திய அளவில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியான பிறகு நான்கு வாரங்களிலேயே வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீடு தாமதமாக வெளியானது. மேலும், தியேட்டர்களிலும் தொடர்ந்து நல்ல கூட்டத்துடன் ஓடியதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
அடுத்த வாரம் மே 3ம் தேதிதான் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகே வெளியாகிறது. இருப்பினும் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பத்து வார இடைவெளியைக் கூட ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டதாம்.
மலையாளத் திரையுலகத்தில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.