'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி | ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4' | இது புதுசு: ஆடியோ ஓடிடி துவக்கம் | விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது: ரஜினிகாந்த் புகழாரம் | 'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது | ஜூலை 14ம் தேதி இளையராஜா கச்சேரி: சென்னையில் நடக்கிறது | பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? |
“நேரம், பிரேமம், கோல்டு” என மூன்று மலையாளப் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். “நேரம்” படம் தமிழிலும் தயாரான படம். 'பிரேமம்' மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த படம். 'கோல்டு' படம் மலையாளத்திலேயே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்ரன் தற்போது 'கிப்ட்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் கூட இனி படங்களை இயக்கப் போவதில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும், முதல்வர், உதயநிதி உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் என சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இனி சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என அறிவித்துள்ளார். “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால், அப்படியே செய்ய உள்ளேன், நிறைய பேருக்கு நல்லது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.