‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நட்சத்திரங்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது படங்களைப் பற்றி கருத்து சொல்ல ஆரம்பித்தனர். தங்கள் அபிமான நட்சத்திரங்கள் தங்களது பதிவுகளை லைக் செய்வார்கள், பதில் அளிப்பார்கள் என்ற ஆர்வத்தில் ரசிகர்களும் மோசமான படத்தைக் கூட 'சூப்பர் தலைவா' என்ற ரீதியில் கருத்துக்களை சொல்லி வந்தார்கள். அதை உண்மை என்று நம்பி நட்சத்திரங்களும் பதிலளித்து வந்தார்கள். வேறு எந்த விமர்சனங்களையும் அவர்கள் படிக்க விரும்பாததால், தங்களது படங்களைப் பற்றிய தவறான கருத்துக்களை உண்மை என்று நம்பி வந்தார்கள்.
பிரச்சனை உருவாகும் போதுதான் அனைத்திற்கு விடிவு காலம் வரும் என்பார்கள். அப்படி ஒரு விடிவு காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தான் நடித்த படங்கள் வெளிவராமல் சிக்கலில் தவித்த சூழ்நிலை வந்த போது டிவிட்டரை விட்டு விலகினார் சிம்பு. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு விவகாரம் இப்போது வந்த பிறகு மீண்டும் டிவிட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளார்.
அதே சமயம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிக்கிய த்ரிஷா டிவிட்டரை விட்டு விலகினார். அதே சமயம் தன்னுடைய கணக்கை யாரோ 'ஹேக்' செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார். டிவிட்டரால் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கை 'ஹேக்' செய்வது நடக்காத ஒன்று. இதே விவகாரத்தில் சிக்கிய மற்ற நட்சத்திரங்களையும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் விடாப்பிடியாக விரட்டி வருகிறார்கள். நடிகர் சங்க செயலாளர் விஷால் நேற்று இரவு திடீரென டிவிட்டரை விட்டு விலகியுள்ளார். விலகலுக்கான காரணத்தை அவர் இன்னும் சொல்லவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு இயக்குனரும், டிவி நிகழ்ச்சி நடத்துனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் அவருடைய விவாத நிகழ்ச்சியைக் கிண்டலடித்த விவகாரத்தில் டிவிட்டரைவிட்டு விலகினார்.
ஏற்கெனவே, அஜித் ரசிகர்களாலும், விஜய் ரசிகர்களாலும் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட்டு சீரழிந்து கொண்டிருந்த சமூக வலைத்தளங்கள் இப்போது மாணவர் போராட்டத்தையும், மக்களின் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு களமாக மாறியுள்ளன. இதன் காரணமாக நட்சத்திரங்கள் பலர் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை விட்டு விலகுவது இன்னும் அதிகமாகலாம்.