பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
க்ரவுட் ஃபண்டிங் என்ற முறையில் பலரிடம் பணம் திரட்டி ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ஒருவழியாக ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியானது. விஜய் நடித்த பைரவா படத்துடன், இப்படம் மட்டும் தான் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 1000 திரையரங்குகளில், 800-ல் பைரவா வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200 திரையரங்குகளில் சுமார் 150 திரையரங்குகளில்தான் கோடிட்ட இடங்களை நிரப்புக வெளியாகியுள்ளது. தன்னுடைய படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றதும் கடுப்பாகிவிட்டார் பார்த்திபன். " பைரவா படத்தோடு வெளியாகும்போது, என் படத்துக்கு முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அனுமதிக்க மறுக்கிறது. அவர்களுடைய விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் சங்க நிர்வாகிகள். பைரவாவுக்கு இணையாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காதபோது என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த கூடாது. எங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்" என்று தயாரிப்பாளர் சங்கத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் பார்த்திபன்.
இதுதான் சாக்கு என்று சில சிறுபட தயாரிப்பாளர்கள் பார்த்திபன் பின்னால் சுற்ற ஆரம்பித்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் சிறுபட தயாரிப்பாளர் அணி சார்பாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.,