பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இருமுகன் படத்தை அடுத்து வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த கால்சீட்டில் இந்த படத்தில் நடிக்கிறார் விக்ரம். டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், விக்ரமுடன் சூரி, யோகிபாபு, சமுத்திரகனி, சம்பத் உள்பட பலர் கமிட்டாகி விட்டனர். அதையடுத்து ஒரு தெலுங்கு வில்லன் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
மேலும், நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசினார்கள். அவர் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருவதால் கால்சீட் கிடைக்கவில்லையாம். அதையடுத்து பிரேமம் சாய் பல்லவியை விக்ரமின் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அதோடு, இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதற்கு முன்பு விக்ரம் எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தபோதும் இந்த கதை விக்ரமை இன்னொரு மாறு பட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் என்கிறார்கள். ஆக, வடசென்னைவாசியாக தன்னை முழுமையாக மாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறார் விக்ரம்