பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா” ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மலையாள நடிகர்களான சுராச் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து விக்ரம் மேலாளர் சூர்யநாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக, மிக, மிக அதிகமாக உள்ளது. இன்று அனைவரின் நல்லாசியுடன் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு துவக்கம். அவர்களின் எதிர்பார்ப்பைவிட பன் மடங்கு 'வீர தீர சூரன்' பூர்த்தி செய்து, மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதில் உறுதியுடன், இறைவனின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.