மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்தின் போஸ்டரில் இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். இது போன்ற போஸ்டர்கள் இன்றைய இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கும். அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்களை தூண்டிவிடும். எனவே இப்படி விக்ரம் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.