பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்த படம் என்பதால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு மட்டம் போட, கௌதம் மேனன் கடுப்பாக ஒரு கட்டத்தில் அச்சம் என்பது மடமையடா ட்ராப்பாகும் சூழல் உருவானது. முதல்பாதி காதல், இரண்டாம்பாதி ஆக்ஷன் என ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முதலில் பல்லவி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு படம் வளராமல் முடங்கிப்போனதால் ஒரு கட்டத்தில் பல்லவி விலகிச்சென்றுவிட்டார். அதன் பிறகு மஞ்சிமா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகுஙம என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது.
'அச்சம் என்பது மடமையடா' படத்தை பார்த்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கியது சென்சார். இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் படத்தை வரும் 11ஆம் தேதி வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். கடவுள் இருக்கான் குமாரு, மீன்குழம்பும் மண்பானையும் படங்கள் இந்த வாரம் வெளிவருவதால் தமிழகமெங்கும் சுமார் 600க்கும் அதிகமாகன திரையரங்குகளை அந்தப் படங்கள் பிளாக் பண்ணிவிட்டன.
எனவே 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குபோதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.