பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கதையே இல்லாத படம் என்று சொல்லிக்கொண்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கினார் பார்த்திபன். அதோடு தான் இயக்கிய எல்லா படங்களிலுமே நடித்து வந்த அவர் அந்த படத்தில் திரைக்குப்பின்னால் இயக்குனராக மட்டுமே செயல்பட்டார். அப்படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. என்றாலும், அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளர் கிடைக்காததால் சில படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து வந்த அவர், தற்போது கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கிறார்.
மேலும், அந்த படம் எந்த மாதிரியான கதை என்பதை பார்த்திபன் தரப்பு வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்துள்ளனர். ஆனால், அதுபற்றி விசாரித்தபோது, அப்படம் பேய் கதையில் உருவாகி வருவதாக தெரிகிறது. ரஜினியின் சந்திர முகி, சுந்தர்.சியின் அரண்மனை படங்களை பாணியில் ஒரு பங்களாவுக்குள் நடக்கும் பேய் கதையில் அப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் பார்த்திபன் பேய் ஓட்டுபவராக வருகிறாரா? இல்லை வேறு மாதிரியான கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.