பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை நேரில் சென்று பிரபு, சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்தினர்.
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு செவாலியே விருது பெறப் போகும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைதளங்களில் பலர் வாழ்த்து சொல்லிய நிலையில் தற்போது கமலை நேரில் சென்று வாழ்த்த தொடங்கினர்.
கமல், தன் வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் கடந்த ஒருமாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கும் கமலை திரையுலகினர் பலரும் நேரில் வாழ்த்த தொடங்கியுள்ளனர்.
நடிகர் சங்கம் சார்பில் விஷால், கார்த்தி, ஸ்ரீமன், நந்தா, சதீஷ், உதயா உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். இதேப்போன்று சிவக்குமார், சூர்யா, கார்த்தி, காளிதாஸ் ஜெயராம், ராம்குமார், துஸ்யந்த், பிரபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கமலுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.