பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சிறிய வயதிலேயே கதாநாயகன் ஆனவர் தனுஷ். அதோடு ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்று அங்கீகரிக்கப்பட்ட நடிகரானார். பின்னர் பாலிவுட் படத்திலும் நடித்து 100 கோடி வசூல் சாதனை நடிகர் பட்டியலில் இடம் பிடித்தார். இப்படி குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை செய்திருக்கும் தனுஷ், சமீபகாலமாக தான் எந்த சினிமா விழாக்களில் கலந்து கொண்டாலும் வேஷ்டி அணிந்துதான் வருகிறார். இதை தனது பாணியாகவே மாற்றி விட்டார்.
அதேபோல் இதற்கு முன்பு எந்த படத்திலும் படம் முழுக்க வேஷ்டி அணிந்து நடிக்காத தனுஷ், முதன்முறையாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் கொடி படத்தில் படம் முழுக்க வேஷ்டி அணிந்து நடிக்கிறார். இளவட்ட அரசியல்வாதியாக தனுஷ் நடிக்கும் இந்த படத்தில் அவரது காட்பாதராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். மேலும், பதவிக்காக போராடும் சராசரி அரசியல்வாதியாக மட்டுமே இல்லாமல் மக்கள் நலன்கருதி சில போராட்டங்களிலும் ஈடுபடும் அதிரடியான அரசியல்வாதியாக இப்படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
மேலும், பாதி படத்திற்கு பிறகு பரபரப்பாக செல்லும் கதையில், அவ்வப்போது தனது வேஷ்டியை தனுஷ் ஸ்டைலாக மடித்துக்கட்டுவாராம். அந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறும் என்கிறார்கள். குறிப்பாக, மாரியில் அவர் பேசிய செஞ்சிடுவேன் -என்கிற டயலாக் இப்போதுவரை சிறுவர் மற்றும் இளைஞர்களால் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் அவர் வேஷ்டியை வரிந்து கட்டும் ஸ்டைலும், வேஷ்டி கட்டும் இளைஞர்கள் மத்தியில் பிர பலமாகி விடும் என்கிறார்கள்.