பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் கொடுத்துவிடும் முனைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரபுசாலமனின் தொடரி, துரைசெந்தில் குமாரின் கொடி படங்களை முடித்து விட்டார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, ஹிந்தியில் ஒரு படம் என வரிசையாக கையில் வைத்திருக்கிறார் தனுஷ்.
நடிகராக மட்டுமல்லாது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் தற்போது அவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்திற்கு பிறகு தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கிறார் தனுஷ்.
இதுநாள் தனுஷின் படங்கள் 25 முதல் 30 கோடி வரையில் தான் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த, கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் படம், ரூ.50 கோடியில் தயாராகிறது. இப்படத்தை தமிழிலும், ஹிந்தியிலும் டப் செய்தும் வெளியிடுகின்றனர். அதன்காரணமாக இப்படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என்று சொல்லப்படுகிறது. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷ் தயாரித்து கொடுக்கும் இப்படத்தை பென் மீடியா வாங்கி வெளியிடுகிறது.