சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
மருது படத்தை தொடர்ந்து விஷால் கமிட்டான படம் ''கத்திச்சண்டை''. சுராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுக்கிறார். கூடவே சூரியும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடந்தது. விஷால், வடிவேலு, சூரி, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்களுடன் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
கத்திச்சண்டை படத்தில் நடிப்பது குறித்து வடிவேலு கூறியுள்ளதாவது... ''இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். நிறைய ஹிட் கொடுத்த இயக்குநர் உடன் திரும்பவும் வேலை பார்க்க போகிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் நடிகர் சங்கத்தின் அடுத்தடுத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும், ஹீரோவுக்கு பக்கபலமாக இருக்க கூடிய எந்த ரோலிலும் நடிப்பேன் என்றவரிடத்தில் அரசியல் குறித்த கேள்வி கேட்டபோது அய்யய்யோ அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்'' என்றார்.
சூரி கூறியதாவது... ''விஷால் உடன் எனக்கு இது நான்காவது படம். அதோடு வடிவேலு உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலாய் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் சுராஜ் கூறியதாவது... ''என் மீது நம்பிக்கை வைத்து விஷால் இந்தப்படத்தை கொடுத்துள்ளார். காமெடி கம் ஆக்ஷ்ன் படமாக பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும். தலைநகரம், மருதமலை படத்திற்கு பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன். இப்படத்தில் வடிவேலு டாக்டர் பூத்ரி என்ற ரோலில் கலக்க உள்ளார் என்றார்.
விஷால் பேசும்போது... ''சுராஜ் உடன் நான் இணையும் முதல் படம் இது. நல்ல கதையம்சம் உள்ள இப்படம் இருக்கும். என்னுடன் ஜெகபதி பாபு நடிக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் வடிவேலுடன் நடிக்கிறேன். முதன்முறையாக தமன்னா எனக்கு ஹீரோயினாக நடிக்கிறார். மே 9ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹிப்-ஹாப், ஆதி, ரிச்சர்ட் போன்றவர்கள் இசை மற்றும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றுகிறார்கள். தெரிந்த முகங்களுடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. இங்கு யாருக்கும் எந்த பொறாமையும் இல்லை, விருப்பப்பட்டு அனைவரும் வேலைபார்க்கும் படம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.