ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண முகர்ஜி. கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'சுப் ஷகுன்' தொடரில் நடித்தபோது அதன் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
எனது மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்ல எனக்கு இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை. ஆனால் இன்று நான் அதைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் கடினமான காலங்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு எளிதாக இல்லை. நான் தனிமையில் இருந்தபோது மனச்சோர்வுடனும், கவலையுடனும், மனதுக்குள் அழுதேன். தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சியை நான் செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்குத் தொடங்கியது. அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு. ஆனால் நான் மற்றவர்களைக் கேட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர்.
ஆடைகளை மாற்றும் போது, அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். 5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை. இதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன். இதுதொடர்பாக நான் பலரிடம் உதவி கேட்டேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் ஏன் எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதுதான் காரணம். எனக்கு பயமா இருக்கு. அதே மாதிரி மீண்டும் நடந்தால் என்ன ஆகும்? எனக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.