'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திரைப்படங்கள் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஆனால், ஒரு படத்தின் நான்காம் பாகம் என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். அப்படி ஒரு அபூர்வமாக 'அரண்மனை 4' நாளை வெளியாக உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். முந்தைய மூன்று பாகங்களைப் போலவே இந்தப் படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
'அரண்மனை' படத்தின் முதல் பாகம் 2014ல், இரண்டாம் பாகம் 2016ல், மூன்றாகம் பாகம் 2021ம் ஆண்டில் வெளியானது.
இதற்கு முன்பு 'காஞ்சனா' படம் மூன்று பாகங்களாகவும், 'சிங்கம்' படம் மூன்று பாகங்களாகவும் வெளிவந்தது. 'காஞ்சனா' பட பாகங்களை முனி சீரிஸ் எனவும் அழைத்து 'காஞ்சனா 3' படத்தை முனி 4 என்றும் குறிப்பிட்டார்கள்.