தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
கதாநாயகன் என்றால் அட்லிஸ்ட் இந்த அளவுக்கு பர்சனாலிட்டியாக இருக்க வேண்டும் என்கிற கருத்துக்களை உடைத்தெறிந்து விட்டு, ஒல்லிக்குச்சியான நடிகராலும் உசரத்துக்கு போக முடியும் என்பதை நிரூபித்தவர்தான் தனுஷ். எந்தவொரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் திறமையான நடிகர் அவர். அவரது நடிப்பைப் பார்த்து விட்டு, விஜய் உள்ளிட்ட சமகாலத்து நடிகர்களே தனுஷை திறமையான நடிகர் என்று மேடைகளிலேயே கூறி வருகிறார்கள். அதோடு, வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்துக்காக இந்திய அரசின் தேசிய விருதினையும் பெற்றார் தனுஷ்.
இந்நிலையில், கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஒரு தொலைக்காட்சியில் டைரக்டர் கெளதம்மேனனுடன் தனுஷ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்றபோது உங்களது மனநிலை எப்படியிருந்தது? என்று கெளதம்மேனன் தனுஷிடம் கேட்டார். அதற்கு, தேசிய விருது பெரிய அங்கீகாரம். அது கிடைத்தது பெரிய மகிழ்ச்சிதான். என்றாலும் அந்த விருது 2011-ல் எனக்கு கிடைத்தபோது, ரஜினி சார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் தேசிய விருது மகிழ்ச்சியை அப்போது என்னால் கொண்டாட முடியவில்லை என்றார்.