விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
டைரக்டர் சுதாவின் இயக்கத்தில் மாதவன் -ரித்திகா சிங் நடித்துள்ள படம் இறுதிச்சுற்று. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
அப்போது மாதவன் பேசுகையில், இந்த இறுதிச்சுற்று டீமில் ஒர்க் பண்ணிய அனைவருமே எனது மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார்கள். அனைவருமே ஒரு குடும்பம் மாதிரி இருந்தோம். யு-டிவி தனஞ்செயன் நீங்கள் எங்கேயும் போகாதீர்கள். தமிழிலேயே நடியுங்கள் என்றார். நான் எங்கேயும் போக மாட்டேன். தமிழ் சினிமாதான் எனக்கு உயிர்.
மேலும், இந்த படம பண்ணும்போது நாலு வருசமா பல தடைகள் வந்தது. ஒவ்வொரு தடங்கல் வரும்போதும், யாராவது கைகொடுப்பார்களா? என்றபோது ஒவ்வொரு தடவையும் ஒரு சிக்னல் கிடைத்துக்கொண்டேயிருந்தது. என்னதான் இறுதிச்சுற்றாக இருந்தாலும் நானும், டைரக்டர் சுதாவும் தைரியமாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்தோம். கடைசி வரைக்கும் கொண்டு வந்து விட்டோம். பின்னர் படத்தை மீடியாக்களுக்கு ஷோ போட்டபோது நீங்கள் கொடுத்த ரியாக்சன்தான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்துக்காக பட்ட கஷ்டம், வேதனை, அவமானம் எல்லாமே போய் விட்டது. நல்ல சினிமா கொடுத்தால் மீடியாக்கள் பாராட்டுவார்கள் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.
நிறைய தடவை இந்த படத்தை விட்டுடலாம். வேற படம் பண்ணலாம் என்று நினைக்கும்போதெல்லாம் எனது நண்பர் ஒரு விசயம் சொன்னார். இப்ப நீ விட் டுட்டேன்னா அடுத்தவாட்டி இந்த கட்டத்துக்கு வரமாட்ட. ஆரம்பிச்ச இடத்துல போய் நிற்பே என்றார். அதனாலதான் போராடி ஒரு வழியாக படத்தை முடிச்சோம். நீங்க கொடுத்த இந்த விமர்சனம் எனக்கு அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்கிற பயத்தை கொடுத்துள்ளது. காசுக்காக நடிக்கக்கூடாது உங்ககிட்டயிருந்து பாராட்டு வாங்குற மாதிரி கதைகளில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற எண்ணமும், நம்பிக்கையும் இப்போது எனக்கு ஏற்பட் டுள்ளது என்றார் மாதவன்.
டைரக்டர் சுதா பேசும்போது, இந்த படத்தோட பிரஸ் ஷோ போடும்போது, உங்களுக்கு பிடிச்சிருந்தா கத்தி கத்தி எழுதுங்க. பிடிக்கலேன்னா எங்கிட்ட சொல்லுங்க. அடுத்த படமாவது நல்லதா எடுக்கிறேன்னு சொன்னேன். அப்போது, படம் பார்த்து விட்டு அவர்கள் வரும்போது நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். ஒருவேளை மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேச்சுக்காக நல்லாயிருக்கு என்று சொல்லிவிட்டு செல் வார்கள் என்றனர். அதனால் பிரஸ் ஷோ போடும் இடத்தில் இருக்க வேண்டாம் என்று என்னை பிரிமியர் ஷோ நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர்.
ஆனால் படம் முடிந்த பிறகு பல மீடியா நண்பர்கள் எனக்கு மாறி மாறி போன் செய்து பாராட்டினர். அதைக்கேட்டு கேட்டு சந்தோசத்தில் நான் அழுது கொண்டேயிருந்தேன். படம் வெளியாவதற்கு முன்பு இறுதிச்சற்று படத்தை பார்த்த வர்கள் ஏ சென்டரில் போகும் மற்ற சென்டர்களில் போகாது என்றார்கள். இன்னும் சிலர், மல்டி பிளக்ஸ் ஆடியன்சு மட்டும்தான் ரசிப்பார்கள் என்றனர். மேலும், இந்த மாதிரி கதைகள் இந்தியில்தான் ஒர்க்அவுட்டாகும், தமிழில் ஒர்க்அவுட்டாகாது என்றார்கள்.
ஆனால், இந்த படம் இந்தியில் சூடு பிடிக்கிறதுக்கு 2 நாள் ஆச்சு. ஆனால் தமிழில் ஒரே ஷோவில் ரீச் ஆகி விட்டது. மீடியாக்கள் எழுதிய விமர்சனத்தைப் பார்த்து விட்டு, பலரும் போன் போட்டு உங்க படம் நல்லா இருக்குதாமே என்று கேட்டார்கள். மீடியாக்கள் கொடுத்த விமர்சனம் காரணமாக எல்லா சென்டர்களிலுமே தியேட்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஆக, இந்த படத்துக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது மீடியாக்கள்தான் என்றார்.