நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

பத்மினி முன்னணி நடிகை ஆவதற்கு முன் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் ஆடி வந்தனர். சில காலத்திற்கு பிறகு ராகினி மலையாளத்தில் பிசியான நடிகை ஆகிவிட்டதால், பத்மினியும், லலிதாவும் ஆடி வந்தனர்.
இவர்கள் இருவரும் 'தர்ம தேவதா' என்ற படத்தில் 5 பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். காரணம் இந்த படத்தில் அவர்கள் தெருவில் நடனமாடி பிழைக்கும் நடன கலைஞர்களாக படத்தில் நடிக்கவும் செய்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரானது. தமிழில் தோல்வி அடைந்தது, தெலுங்கில் வெற்றி பெற்றது. சாந்தகுமார் நாயகியாக நடித்தார், அவரது கணவர் புல்லையா படத்தை தயாரித்து, இயக்கினார்.
சச்சு, கிரிஜா, சி.வி.வி. பந்துலு, கே.துரைசாமி, லிங்கமூர்த்தி, முக்கம்மாளா, பி.என்.ஆர், கவுசிக், ரேலங்கி, லட்சுமிபிரபா, கே.எஸ். அங்கமுத்து, கணபதி பட் மற்றும் 'மாஸ்டர்' மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.




