மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு, பிரணிதா சுபாஷ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் 29பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த 29 பேரும் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் அமலாகத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய மற்ற நடிகர், நடிகைகள் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.