மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு, பிரணிதா சுபாஷ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் 29பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த 29 பேரும் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் அமலாகத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய மற்ற நடிகர், நடிகைகள் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.