தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். அந்த தெலுங்கு படத்தின் தலைப்பு 'குர்ரம் பாப்பி ரெட்டி'. முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல தெலுங்கு காமெடியன் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அந்தவகையில், பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்துள்ளார், இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள அவர், "நான் பிரம்மானந்தம்" என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.