பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். அந்த தெலுங்கு படத்தின் தலைப்பு 'குர்ரம் பாப்பி ரெட்டி'. முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல தெலுங்கு காமெடியன் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அந்தவகையில், பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்துள்ளார், இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள அவர், "நான் பிரம்மானந்தம்" என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.