56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். அந்த தெலுங்கு படத்தின் தலைப்பு 'குர்ரம் பாப்பி ரெட்டி'. முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல தெலுங்கு காமெடியன் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அந்தவகையில், பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்துள்ளார், இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள அவர், "நான் பிரம்மானந்தம்" என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.