மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன் சார்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புதுமுகம் சுரேஷ் ரவியுடன் யோகி பாபுவும் இணை நாயகனாக நடிக்கிறார். தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
கே.பாலய்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்து பின்னணியில், கலக்கலான பேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. என்றார்.