துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன் சார்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புதுமுகம் சுரேஷ் ரவியுடன் யோகி பாபுவும் இணை நாயகனாக நடிக்கிறார். தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
கே.பாலய்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்து பின்னணியில், கலக்கலான பேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. என்றார்.