7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றி திருமண மோசடி செய்துவிட்டதாகவும், அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் இவரின் குற்றச்சாட்டை மறுத்து வந்த ரங்கராஜ், இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியிருந்தார்.
சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் ரங்கராஜ் தன் மனைவி உடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தச்சூழலில் கடந்தவாரம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ரங்கராஜ் போன்றே இருப்பதாகவும், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்து இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவில், ‛‛மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என ஒப்புக் கொண்டதாகவும்'' குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.