இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1956ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'மதுரை வீரன்'. பானுமதி, பத்மினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த இந்த படத்தை லோனா செட்டியார் தயாரித்திருந்தார்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் லேனா செட்டியார் நடிகை பத்மனிக்கு கொடுத்த வாக்கின் காரணமாக அவருக்காக எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் தனியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர, இந்த பாடல் படத்தை கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நான் பணம் போட்டு படம் எடுத்திருக்கிறேன். இதில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று லேனா செட்டியார் சொல்ல, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன் பத்மினி பாடல் படத்திற்கு தடையாக இல்லை, பலமாகத்தான் இருக்கிறது என்பதை எம்ஜிஆரிடம் கூறியுள்ளார்.
ஆனாலும் எம்ஜிஆர் விடுவதாக இல்லை. நன்றாக இருக்கிறதோ, இல்லையோ என்னை கேட்காமல் பத்மினிக்கு பாடல் வைத்தது தவறு அதை ஏற்க மாட்டேன் என்றார். ஆனாலும் என்.எஸ்.கே பொறுமையாக எம்ஜிஆரிடம் பேசி தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி படம் எடுத்த விஷயத்தை சொல்லி படம் வராவிட்டால் அவர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார் என்பதை சொல்லி எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார்.
அதன்பிறகு 'மதுரை வீரன்' படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. என்றாலும் பத்மினியின் பாடல் படத்திற்கு தேவைப்படாத ஒன்று என்ற கருத்தில் இருந்து எம்ஜிஆர் மாறவில்லை.




