மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா |
அடிப்படையில் மலையாளியான வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால் மலேசியா வாசுதேவன் ஆனார். மலேசிய இசை குழுவில் பாடி வந்த அவர் இளையராஜாவின் அண்ணன் நடத்திய பாவலர் இசை கக்சேரிகளிலும் பாடினார்.
அதன்பிறகு '16 வயதினிலே' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆனார். தமிழில் மட்டும் 8 ஆயிரம் பாடல்களும் பிற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடினார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் அவர் சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்திருக்கிறார். உறவுகள், இதோ வருகிறேன், சாமந்தி பூ, பாக்கு வெற்றிலை, ஆயிரம் கைகள், ஆறாவது குறுக்கு தெரு, கொலுசு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் இசை அமைத்த பாடல்கள் வரவேற்பை பெறாததாலும் தனியாக இசை அமைப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.