பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் |
அடிப்படையில் மலையாளியான வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால் மலேசியா வாசுதேவன் ஆனார். மலேசிய இசை குழுவில் பாடி வந்த அவர் இளையராஜாவின் அண்ணன் நடத்திய பாவலர் இசை கக்சேரிகளிலும் பாடினார்.
அதன்பிறகு '16 வயதினிலே' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆனார். தமிழில் மட்டும் 8 ஆயிரம் பாடல்களும் பிற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடினார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் அவர் சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்திருக்கிறார். உறவுகள், இதோ வருகிறேன், சாமந்தி பூ, பாக்கு வெற்றிலை, ஆயிரம் கைகள், ஆறாவது குறுக்கு தெரு, கொலுசு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் இசை அமைத்த பாடல்கள் வரவேற்பை பெறாததாலும் தனியாக இசை அமைப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.