'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. அவ்வளவாக பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் நடித்து மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 230 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் சவ்பின் சாஹிர் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அதேசமயம் இந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற சில நாட்களில் சிராஜ் வளையதாரா என்பவர் மஞ்சும்மேல் பாய்ஸ் பட தயாரிப்புக்காக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியாகி லாபத்தில் தனக்கு 40 சதவீதம் கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு தற்போது தனக்கு பணத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் சவ்பின் சாஹிருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம் அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம் வரும் ஜூன் 27ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளது, எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சவ்பின் சாஹிர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.