ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. அவ்வளவாக பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் நடித்து மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 230 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் சவ்பின் சாஹிர் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அதேசமயம் இந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற சில நாட்களில் சிராஜ் வளையதாரா என்பவர் மஞ்சும்மேல் பாய்ஸ் பட தயாரிப்புக்காக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியாகி லாபத்தில் தனக்கு 40 சதவீதம் கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு தற்போது தனக்கு பணத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் சவ்பின் சாஹிருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம் அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம் வரும் ஜூன் 27ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளது, எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சவ்பின் சாஹிர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.