தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். தற்போது ‛பராசக்தி, கராத்தே பாபு' போன்ற படங்களில் நடிக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக, பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற பட தயாரிப்பு நிறுவனம், ரவி மோகனுக்கு 15 கோடி சம்பளம் பேசி அதில் 6 கோடி ரூபாய் முன்பணம் தந்துள்ளனர். ஆனால் ஒப்பந்தப்படி ரவி படம் நடிக்கவில்லை என கூறி அவர் மீது தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன் பதில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ரவி மோகன் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்ய பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவால் ரவி மோகன் சொத்துக்கள் முடங்க வாய்ப்புள்ளது.