நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். தற்போது ‛பராசக்தி, கராத்தே பாபு' போன்ற படங்களில் நடிக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக, பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற பட தயாரிப்பு நிறுவனம், ரவி மோகனுக்கு 15 கோடி சம்பளம் பேசி அதில் 6 கோடி ரூபாய் முன்பணம் தந்துள்ளனர். ஆனால் ஒப்பந்தப்படி ரவி படம் நடிக்கவில்லை என கூறி அவர் மீது தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன் பதில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ரவி மோகன் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்ய பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவால் ரவி மோகன் சொத்துக்கள் முடங்க வாய்ப்புள்ளது.




