இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் லாக் அப்பில் ஒரு இளம் அனுபவிக்கும் சித்ரவதைகளே படத்தின் கதை. இந்தப்படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி, இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதபதி படத்தை பார்த்தார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “மனுஷி படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காட்சிகளை நீக்க வேண்டாம். ஆனால் சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். காட்சிகள், வசனங்களை மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சென்சார் போர்டு 2 வாரங்களில் பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.