நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் லாக் அப்பில் ஒரு இளம் அனுபவிக்கும் சித்ரவதைகளே படத்தின் கதை. இந்தப்படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி, இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதபதி படத்தை பார்த்தார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “மனுஷி படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காட்சிகளை நீக்க வேண்டாம். ஆனால் சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். காட்சிகள், வசனங்களை மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சென்சார் போர்டு 2 வாரங்களில் பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.