நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் 1988ம் ஆண்டில் சென்னை ஈசிஆர் சாலையில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறார். அதில், பீச் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் இடம்பெற்றுள்ளது. இந்த சொத்துக்களை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பராமரித்து வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மூன்று நபர்கள் போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து அந்த சொத்துக்கு உரிமை கோரி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் அதற்கு எதிராக சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் போனி கபூர். அதில், போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அந்த போலி சான்றிதழ்களை ரத்து செய்ய கோரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் குறித்து தாம்பரம் தாசில்தார் நான்கு வாரங்களில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.