ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அந்த பள்ளியில் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் படித்து வந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் விரைந்து சென்று ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தனது மகனை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
தீ விபத்து என்றாலும் மகன் கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதை தொடர்ந்து பவன் கல்யானின் மனைவி அன்னா லெஷ்னேவா சமீபத்தில் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அது மட்டுமல்ல அன்றைய தினம் பக்தர்களுக்கான 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னதான செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி தன் வேண்டுதலை நிறைவேற்றினார் பவன் கல்யாணின் மனைவி. இது அங்கே வந்திருந்த பக்தர்களை நெகிழ வைத்தது.




