பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா |
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அந்த பள்ளியில் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் படித்து வந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் விரைந்து சென்று ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தனது மகனை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
தீ விபத்து என்றாலும் மகன் கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதை தொடர்ந்து பவன் கல்யானின் மனைவி அன்னா லெஷ்னேவா சமீபத்தில் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அது மட்டுமல்ல அன்றைய தினம் பக்தர்களுக்கான 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னதான செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி தன் வேண்டுதலை நிறைவேற்றினார் பவன் கல்யாணின் மனைவி. இது அங்கே வந்திருந்த பக்தர்களை நெகிழ வைத்தது.