இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அறிமுகமான சமயத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். அதில் குஞ்சாக்கோ போபன், பாவனா ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக தங்களது பயணத்திற்காக வந்த இடத்தில் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “நான் என்னுடன் நடித்த முதல் படத்திலிருந்து ஒரு பப்ளி பெண்ணாக பார்த்து வந்த நடிகை பாவனாவுடன் எதிர்பாராத விதமான ஒரு சந்திப்பு இது. வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வரும் அவரைப் பார்க்கும்போது இதயம் நெகிழ்ந்தது” என்று கூறியுள்ளார். குஞ்சாக்கோ போபனும் பாவனாவும் 'சொப்பனக்கூடு, ஹிருதயத்தில் சூக்ஷிக்கான், டாக்டர் லவ்' உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.