காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி தனது திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டாலும் திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸ்களிலும் நல்ல நல்ல வாய்ப்புகள் அவரை தேடி வரத்தான் செய்கின்றன. அப்படி செலெக்ட்டிவாக நடித்து வரும் பிரியாமணி தற்போது ஹிந்தியில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் இந்திய அமெரிக்க கூட்டு தயாரிப்பாக உருவாகிறது.
கதாநாயகனாக மோகித் ரெய்னா நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஹர்ஸ் மகாதேஸ்வர் இயக்குகிறார். புலம் பெயர்ந்த இந்தியர்கள் அந்த நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நடத்த எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. கடந்த வருடம் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கூட இதே கதையம்சத்தை கொண்டு வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.




