இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அந்த பள்ளியில் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் படித்து வந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் விரைந்து சென்று ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தனது மகனை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
தீ விபத்து என்றாலும் மகன் கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதை தொடர்ந்து பவன் கல்யானின் மனைவி அன்னா லெஷ்னேவா சமீபத்தில் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அது மட்டுமல்ல அன்றைய தினம் பக்தர்களுக்கான 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னதான செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி தன் வேண்டுதலை நிறைவேற்றினார் பவன் கல்யாணின் மனைவி. இது அங்கே வந்திருந்த பக்தர்களை நெகிழ வைத்தது.