‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நடிகர் மம்முட்டி படங்களில் நடிப்பதை தாண்டி, தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக காது கேளாதவருக்கான கருவியை (ஹியரிங் எய்டு கருவி) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போது சில வருடங்களுக்கு முன்பு தனது படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார் மம்முட்டி.
கடந்த 2009ல் மலையாளத்தில் 'லவ்டு ஸ்பீக்கர்' என்கிற படத்தில் காது கேளாத மாற்றித்திறனாளியாக நடித்திருந்தார் மம்முட்டி. அந்த படத்தில் பெரும்பாலும் 'ஹியரிங் எய்டு' அணிந்து கொண்டுதான் மற்றவர்கள் பேசுவதை அவர் புரிந்து கொள்வார். அந்த சமயத்தில் படப்பிடிப்பில் நிஜமாகவே இதுபோன்று காது கேளாத மாற்றுத்திறனாளி தொழிலாளி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்காக மம்முட்டி ஹியரிங் எய்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அதை காதில் பொருத்தியதும் முதன் முதலாக சப்தத்தை கேட்டு உணர்ந்த அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்து போய் அந்த ஹியரிங் எய்டை கழட்டி தூக்கி வீசி விட்டாராம். இந்த நிகழ்வை கூறிய மம்முட்டி, “அத்தனை நாட்களாக சப்தம் எதையுமே கேட்டிராத அந்த நபருக்கு முதன்முதலாக அதை கேட்டபோது அதன் தாக்கத்தை அவரால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அதை கழட்டி வீசினார்” என்று கூறியுள்ளார்.