சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும், அதே காலகட்டத்தில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது வரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர் சியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்குத் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுள்ளனர். சுந்தர் சி முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
“இன்று எனது 25வது திருமண நாளில் எனது திருமணப் புடவையை அணிவதில் மிகவும் பெருமை அடைகிறேன். பழனி முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை விட எங்கள் நாளைத் தொடங்குவதற்கு இதைவிட சிறந்த வழியை நாங்கள் கேட்டிருக்க முடியாது. இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு முருகனின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.