பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும், அதே காலகட்டத்தில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது வரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர் சியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்குத் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுள்ளனர். சுந்தர் சி முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
“இன்று எனது 25வது திருமண நாளில் எனது திருமணப் புடவையை அணிவதில் மிகவும் பெருமை அடைகிறேன். பழனி முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை விட எங்கள் நாளைத் தொடங்குவதற்கு இதைவிட சிறந்த வழியை நாங்கள் கேட்டிருக்க முடியாது. இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு முருகனின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.