கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
நடிகர் பிரித்விராஜ் இரண்டு ஆண்டுகளாகவே ஒரு பக்கம் மோகன்லாலின் ‛எல் 2 : எம்புரான்' படத்தை இயக்குவதிலும், இன்னொரு பக்கம் தெலுங்கில் ‛சலார்', ஹிந்தியில் ‛படே மியான் சோட்டே மியான்' ஆகிய படங்களில் வில்லனாகவும், மாறி மாறி பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்ல ‛சர்ஜமீன்' என்கிற ஹிந்தி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். ஜூலை 25 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது வில்லனாக நடித்தும் வருகிறார் பிரித்விராஜ்.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் உருவாக இருக்கும் கலிபா என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தை புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்குகிறார். கடந்த 2010ல் வெளியான போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜை இயக்கியதன் மூலம் தான் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.