மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த படம் அமரன். இந்த படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட கதையில் உருவானது. இந்த நிலையில் தற்போது சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும், அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.
இந்த பராசக்தி படம் 1965களில் நடந்த கதைக் களத்தில் உருவாகிறது. அதாவது 1965ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது மற்றும் மதுரையில் ஹிந்தி மொழிக்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது தடியடி நடத்திய அரசை கண்டித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தி உள்ளார்கள். அந்த பேரணியின்போது மாணவர்கள் மீது காவல் காவல்துறையினர் தடியடி நடத்தியபோது, ராசேந்திரன் என்ற மாணவரின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்துள்ளார்.
இந்த மொழிப் போரில் உயிரிழந்த ராசேந்திரனுக்கு 1969ம் ஆண்டில் அவரது தியாகத்தை நினைவூட்டும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை திறந்து வைத்துள்ளார். மொழிப்போர் தியாகியான இந்த மாணவர் ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தான் தற்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் உருவாகிறது.
இதில், ராசேந்திரன் என்ற வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த வகையில் அமரன் படத்தை போலவே இந்த படமும் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.