'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

'பராசக்தி' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதற்கான வேலைகளும் ஆரம்பமாகின. இருவரும் அமெரிக்காவில் சென்று விஎப்எக்ஸ் வேலைகளுக்கான சில ஆரம்ப கட்ட சோதனைகளையும் நடத்தினார்கள். சயின்ஸ் பிக்ஷன் படமாக அப்படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட்டைப் பார்த்த போது அது மிக அதிகமாகி உள்ளது.
அவ்வளவு பெரிய தொகையில் படத்தை ஆரம்பிக்கத் தங்களால் முடியாது என தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. மீண்டும் பட்ஜெட்டை சில கோடிகள் குறைத்த பிறகும் அதுவும் அதிகம் என சொல்லப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் தற்போதைய வியாபார நிலவரம், வசூல் நிலவரம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் மிக அதிகமாம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவற்றைச் சேர்த்தாலும் கூட ரிஸ்க் என்று எண்ணியிருக்கிறார்கள். அதனால், இப்போதைக்கு படத்தைத் தள்ளி வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'டான்' இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், அவர் ரஜினி படம் இயக்கப் போய்விட்டதால் அதை முடித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் பக்கம் வருவாராம். எனவே, சிவகார்த்திகேயன் உடனடியாக வேறு இயக்குனரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
அவரது தயாரிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தாய்கிழவி' படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் சொன்ன கதை ஒன்று பிடித்திருக்கிறதாம். அதை ஆரம்பிக்கலாமா என பேசி வருகிறார்களாம்.