ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
தமிழில் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து, பொக்கிஷம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை பத்மபிரியா. அதன் பிறகு 'மிருகம்' என்கிற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து இன்னும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். சிறந்த நடிப்புக்காக தேசிய விருது, தமிழக, கேரள அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். தமிழில் கடைசியாக 'தங்க மீன்கள்' படத்தில் கதாநாயகியாகவும் 'பிரம்மன்' படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி இருந்தார் பத்மப்பிரியா. 2014ல் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சில வருடங்கள் மட்டுமே படங்களில் நடித்தவர் தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது கணவர் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்மபிரியா கூறும்போது, “என் கணவரை எப்போது முதன்முறையாக சந்தித்தேனோ, அப்போதே இவர்தான் என் கணவர் என என் மனதிற்குள் தீர்மானித்து விட்டேன். அவர் அரசியல் கட்சியில் நுழைந்தது நானே எதிர்பாராதது. அதேசமயம் ஒரு மனைவியாக அவரது அரசியல் விவகாரங்களில் நான் ஒருபோதும் குறுக்கிடுவது இல்லை. அவரைப் பொறுத்தவரை யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்க மாட்டார் என்பதால் அவரது அரசியல் பிரவேசம் என்னை கவலைப்படுத்தவில்லை.
இதில் இன்னொரு விசேஷம் என்ன என்றால் நான் நடித்து வந்த சமயத்தில் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று சொன்னேன். ஆனால் திருமணம் செய்து கொண்டேன். மீண்டும் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சொன்னேன். ஆனால் திரும்பவும் நடிக்க வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வர மாட்டேன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வாழ்க்கை என்பது நாம் எதிர்பாராத விஷயங்களைக் கொண்டது. எது கிடைத்தாலும் என்னுடைய முழுமையான பங்களிப்பை அதில் தருவேன்” என்று கூறியுள்ளார்.