மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் ‛கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி' போன்ற படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். அதேபோல் தான் விஜய்யும் அவரின் மனதிற்கு பிடித்ததை செய்து வருகிறார். அது அரசியல் என்பதால் தான் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளை யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்கப்போகிறேன் என்றால் நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டலாம்" என தெரிவித்துள்ளார்.