வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் ‛கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி' போன்ற படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். அதேபோல் தான் விஜய்யும் அவரின் மனதிற்கு பிடித்ததை செய்து வருகிறார். அது அரசியல் என்பதால் தான் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளை யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்கப்போகிறேன் என்றால் நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டலாம்" என தெரிவித்துள்ளார்.




