கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் |

மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அங்கே நிகழும் பாலியல் அத்துமீறல்கள், பெண்களுக்கு சம உரிமை மற்றும் ஊதியம் கொடுக்கப்படாதது உள்ளிட்ட பல விஷயங்களை வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து பல நடிகைகள் சினிமாவில் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்களை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பத்மபிரியா தமிழ் படம் ஒன்றில் நடித்த போது தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “தமிழில் நான் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு நிறைவடைந்த போது அந்த படத்தின் இயக்குனர் அனைவரின் முன்னிலையிலும் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால் மீடியாக்களில் நான் அவரை அறைந்ததாக செய்திகள் வெளியாகின. இது குறித்து நான் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன். அதன் பிறகு அந்த இயக்குனர் ஆறு மாதம் படம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டார். நானே அடித்து விட்டு நானே எதற்காக புகார் கொடுக்க வேண்டும் என யாருமே கேள்வி எழுப்பவில்லை” என்று கூறியுள்ள பத்மபிரியா அந்த இயக்குனரின் பெயர் குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை.
அதே சமயம் அவர் தமிழில் ஆதி கதாநாயகனாக அறிமுகமாகிய மிருகம் படத்தில் இயக்குனர் சாமியின் டைரக்ஷனில் கதாநாயகியாக நடித்தபோதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.